உங்களை எமது இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

கடற்கன்னி பற்றி பரபரப்புச்செய்திகள்

Saturday 10 July 2010


உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.




கடல்கன்னி அதிசயம் ஆனால் உண்மை


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையில் இடம்பெற்றுள்ள
இறுதிப்போரின்போது செல்தாக்குதலில் மாட்டிக்கொண்ட கடல்கன்னி முல்லைத்தீவின் கடல்க்கரையில் ஒதிங்கியுள்ளது.
இந்தக்காணொளி கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டுள்ளது
அண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் ஒரு மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.

கடல்கன்னி பற்றிய காணொளி

Read more...

ஊர்வனை பற்றி சில

Saturday 19 June 2010



நிலத்தில் ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஊர்வன எனப்படும்.ஊர்வனைகள் பொதுவாக முதுகெலும்பு காணப்படும் அனால் இவ்வாறான எறும்பு, தேள், பூரான்,சிலந்தி போன்ற பூச்சிகளுக்கு முதுகெலும்பு காணப்படுவதில்லை. பெரும்பாலானவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் அனால் சில அனகொண்டா போன்றவை இரண்டும் செய்யும் சிறப்பியல்பு படைத்தவை.கால்கள் காணப்படும் சில பாம்பு போன்ற பிராணிகளுக்கு கால்கள் கிடையாது.


Read more...

உலகின் மிகப்பெரிய பறவை இனம்

Saturday 12 June 2010



உலகின் மிகப்பெரிய பறவை எச்சம் வடமேற்கு சீனாவின் கன்சூ மாகாணத்தில் 2006ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 'Ornithomimosauris எனப்படும் புராதன ஒஸ்ட்ரிச் பறவை இனத்தின் (டைனோசர்) இதுவே மிகப்பெரிய பறவை இனம் ஆகும்.இதன் நீளம் 8 மீற்றரும் எடை 626Kg மும் ஆகும். இந்த மிகப்பெரிய ஒஸ்ட்ரிட்ச் பறவையின் பழமையான இந்த டைனோசர் எச்சம் 100 மில்லியன் வருடம் பழமையானது.

Read more...

பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன்களைப்பற்றி

Friday 11 June 2010



நாங்கள் மீன்களைப்பற்றி நிறைய விடயங்களை அறிந்த்திருக்கிறோம் ஆனால் blackspot angelfish என்று அழக்கப்படும் ஒரு வகை மீன், பெண்ணாக இருந்து ஆணாக மாறுகிறது!. ஆனால் இம்மாற்றம் ஒரு மீன் தான் விரும்பியவுடன் நடைபெறுவதில்லை. இந்த மாற்றங்கள் சில பிரத்யேகமானகாரணங்களுக்காக நிகழ்கிறது!

இந்த ஏஞ்சல்வகை மீன்கள் குழுக்களாக வாழும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆண் மீனும், (நீலக் கலரில் உள்ள மீன்), மற்றும் நான்கு பெண் மீன்கள் (மஞ்சள் நிற மீன்கள்) இருக்கும்.

ஆண் ஏஞ்சல் மீன் மட்டுமே திடகாத்திரமானதும், வலிமை மிக்கதுமாக இருக்கும். ஆண் மீன்தான் அங்குள்ள மற்ற பெண் மீன்களுக்கு முழுப் பாதுகாப்பையும் வழங்குகிறது.

அதாவது அக்குழுவிற்கு காவலாளி. எப்பொழுது அந்த ஆண் மீன் இறந்து விடுகிறதோ அக்குழுவிற்கு ஒரு காவலாளி தேவைப்படுகிறார். அப்பொழுது அங்குள்ள பெண் மீன்களில் பெரிய உருவமுடைய மீன் தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொள்ளத் துவங்குகிறது.

முதலில் தன் உருவத்தை மிகப் பெரிதாக வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. பிறகு ஒரு வாரத்தில், அப்பெண்மீன் தன் நிறத்தை மஞ்சள் கலரில் இருந்து நீலக் கலருக்கு மற்றிக் கொள்கிறது, மெதுமெதுவாக அந்தப் பெண்மீன் தன் நடவடிக்கைகளை ஆண் மீனைப்போல் மாற்றிக் கொள்கிறது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதன் உடலில் கருப்புக் கோடுகள் உருவாகிறது. இம்மாற்றம் அந்த மீன் தற்பொழுது முழு ஆணாக மாறிவிட்டதை சுட்டிக் காட்டுகிறது.

இந்த மாற்றம் hermaphroditism (இரு பாலுறுப்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள நிலை) என அழைக்கப்படுகிறது.

பெண்மீன் (blackspot angelfish)




ஆண்மீன் (blackspot angelfish)



Read more...

வினோதமான உயிரினங்கள்

Friday 4 June 2010

  • வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
  • நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
  • ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை தீக்கோழி தீக்கோழி ஒரேதாவலில் 7 மீட்டர் தூரம் தாண்டதாவ முடியும் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
  • பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தவுடன் உடனே பறக்கத் தொடங்கிவிடும்.
  • எந்தவிலங்கின் மூளை அதிக எடை கொண்டது-யானை.
  • நீரில் நீந்திக்கொண்டே உறங்கும் உயிரினம்-வாத்து.
  • சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது-தி பிளாக் விடோ.
  • யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு-வால்ரஸ்.
  • நின்று கொண்டே உறங்கும் விலங்கு--குதிரை.

Read more...

உலகில் உள்ள அதிவேகவிலன்குகள்

Tuesday 1 June 2010

(Spine-tailed swift)உலகில் மிக வேகமாக பறக்கும் பறவை ஆகும், இதன் வேகம் சுமார் 170 km/h




(sailfish)உலகில் மிக வேகமாக நீந்தும் உயிரினம் ஆகும், இதன் வேகம் சுமார் 109 km/h.































சிறுத்தைபுலி உலகிலே மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு ஆகும். இவ்விலங்கு மணிக்கு 70மைல்கள் ஓடக்கூடியது









சிறுத்தைப்புலி ஓடும் வேகம் பற்றிய காணொளிகள்

Read more...

செவ்வாய்க்கிரகத்தில் உயிரினம் வாழலாமென நம்ப்பப்ப்டுகிறது.

Friday 28 May 2010


(mars )செவ்வாய்க்கோள் உயிர்கள் வாழலாம் என நம்ப்பபடும் கோள் ஆகும்.செவ்வாய்க்கிரகத்தினை செங்கோளென அழைப்பர் செவ்வாய் கிரகத்தின் மண், உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொண்டு உள்ளதாகவும், உப்பு கலந்த சுற்றுச்சூழல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்கா பீனிக்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. இந்த கிரகத்தில் இறங்கிய பீனிக்ஸ் விண்கலம் சமீபத்தில் தான் பனிக்கட்டிகள் அங்கு இருப்பதை கண்டுப்பிடித்தது. இதன் மூலம் அங்கு தண்ணீர் கிடைக்கும் என்று நம்ம்பப்படுகிறது . அதன் பிறகு அந்த விண்கலத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் இயந்திரத்தின் கை என்ற பகுதி மூலம் மண் அள்ளப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், செவ்வாய் கிரகத்தின் வட துருவ பகுதியில் உப்பு கலந்த சுற்றுச்சூழல் உள்ளது என்பதும், மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான ஆர்கானிக் கார்பன் சத்து உள்ளது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது
செவ்வாய்கிரகம்




செவ்வாயில் ஆராட்சி செய்யும் இயந்திரம்



Read more...

புலியோடு சேட்டைசெய்யும் குரங்கின் காணொளி.

Thursday 27 May 2010


புலி என்றாலே எல்லாமிருகங்களும் திக்குதிசை தெரியாமல் ஓடும் ஆனால் இந்தக்குரங்கு புலியோடு சேட்டை செய்கிறது.

Read more...

உலகத்தின் உயரமான கட்டிடங்களும் மற்று சுழல்கட்டிடமும்

Monday 24 May 2010


உலகக்கட்டிடங்கள் இந்த வரிசையில் உள்ளது



உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றுள்ள புர்ஜ் துபாய் இதன் உயரம் 2,683 அடி என்று கூறப்பட்டாலும், துல்லியமான உயரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 169 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் 76வது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.






தைவானில் உள்ள தைபே-101 கட்டிடம்தான் உலகிலேயே இரண்டாவது உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றிருந்தது.இதன் (1,671 அடி) யாக இருக்கிறது






உலகின் முதலாவது சுழலும்மாடிக்கட்டிடம்

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடமொன்றை துபாயில் ஸ்தாபிப்பதற்கான திட்டம் கட்டிடக் கலைஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 420 மீற்றர் உயரமான இந்த 80 மாடிக் கட்டிடமானது நியூயோர்க்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் டேவிட் பிஷரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தக் கட்டிடத்தின் மாடிகளுக் கிடையில் சுழலும் இயந்திர சாதனங்கள் பல பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாடியையும் விரும்பிய திசைக்கு திருப்ப முடியும் என டேவிட் பிஷர் கூறுகிறார். இந்தச் சுழலும் மாடியிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பு அலகும் ஒரு சதுர அடிக்கு 3000 டொலர் வீதம், 4 மில்லியன் டொலரிலிருந்து 40 மில்லியன் டொலர் வரையான விலைக்கு விற்பனையாகவுள்ளது. மேற்படி சுழலும் மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Read more...

கடற்கன்னி பற்றி பரபரப்புச்செய்திகள்

Sunday 23 May 2010


கடல்கன்னி அதிசயம் ஆனால் உண்மை


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையில் இடம்பெற்றுள்ள

இறுதிப்போரின்போது செல்தாக்குதலில் மாட்டிக்கொண்ட கடல்கன்னி முல்லைத்தீவின் கடல்க்கரையில் ஒதிங்கியுள்ளது.

இந்தக்காணொளி கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டுள்ளது


இந்த வீடியோவைப்பார்ப்பதற்கு இதை அழுத்தவும்



அண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் ஒரு மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.



கடல்கன்னி பற்றிய காணொளி

Read more...

கங்காரைப்பற்றி (kangaroo)

Saturday 22 May 2010

கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது பாலூட்டிகளில் அதிக தூரம் தாவும் திறனுடையது இதன் வேகம் சுமார் 52கிலோமீட்டர் ஆகும் இவை பொதுவாகஆஸ்திரேலியாவிலும் மற்றும் அதற்க்குச்சொந்தமான தீவுகளிலும் காணப்படுகின்றன. இவை நான்கு கால்கள் இருந்தாலும் பின்னங்கால்களாலே தத்திச்செல்லும் . சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகிறது.இவைகள் பல நிறங்களில் காணப்படுகின்றன. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டிகளை வைத்திருக்கின்றன குட்டிகள் பால்அருந்துவதற்கான முலையும் இந்தப் பையினுள்ளேயே இருக்கின்றது










Read more...

உலகின் மிகப்பெரிய மரங்கள்

Friday 21 May 2010


Redwood எனும் மரம் . இவை உலகத்திலுள்ள மிகப் பாரிய மரங்கள் என்று பெயர் பெற்றவை. இவற்றின் தண்டு நேராக உயர்ந்து வளர்ந்து ,கீழ் நோக்கி சற்றுச் சாய்வாக கிளைகளைப் பரப்புகின்றன. கிழுள்ள படத்தில் இதன் தோற்றத்தைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட 8 -12 அடி வரை விட்டமுள்ள தண்டுடன் 300 அடிக்கு மேல் உயர்ந்து வளர்கின்றன. இந்த அசாதாரண உயரத்தினால். வேர்களினால் உறுஞ்சப் படும் நீர் உச்சிவரை செலுத்தப் படுவதில்லை. இதன் உச்சியில் காணப் படும் ஊசி முனைகள் அங்கே படியும் பனியைத் தேக்கி வைத்து உறிஞ்சும் தன்மையுள்ளன. இதனால் பனி கொட்டும் பிரதேசங்களில் தான் இந்த மரங்கள் பெருகிக் காணப் படுகின்றன. 20 வீதம் விதைகளாலும், 80 வீதம் இயற்கைப் பதியத்தாலும் இவை இனத்தைப் பெருக்குகின்றன.

இந்த மரங்களில் சில டைனசோ இருந்த காலங்களிலிருந்து உயிர் வாழ்கின்றன. உலகில் பல இடங்களில் காணப் பட்டாலும் சில பாரிய ,பழைய மரங்கள் கலிபோனியாவிலும்,நெவேடா மலையடிகளிலும் , சீனாவிலும் காணப் படுகின்றன.
இந்த மரத்தின் பட்டை மிகத் தடிப்பானது.நெருப்பினால் அழியாதவண்ணம் ஒரு கவசம் போல் இது காக்கின்றது.தண்ணீராலும் இந்த மரங்கள் இலகுவில் உக்கிப் போவதில்லை. இந்தப் பட்டையின் சுவை பூச்சிகளினால் விரும்பப் படாததாகவும் , நச்சுத் தன்மையுள்ளதாகவும் இருப்பதால், இந்த மரம் பூச்சிகளினால் பாதிக்கப் படுவதில்லை. இதனால் தளபாடங்கள் செய்யவும், விசேடமாக கட்டட வேளைகளில் விரும்பிப் பாவிக்கப் படுகிறது. அமிலங்களைத் தாங்கக் கூடிய சக்தியுள்ளவை என்பதால், 1930-1960 கால கட்டத்தில் ஆகாய hவிமானங்களில் battery களில் இவை பாவிக்கப் பட்டனவாம்.





Read more...

aamadilla என்னும் ஒரு வகையான விலங்கு

Tuesday 18 May 2010

(aamadilla) என்பது ஒரு வகையான எறும்பு உண்ணி விலங்கு இது எதிரிகளைக்கண்டவுடன் தன்னைக் பந்து போல் உருட்டிக்கொள்ளும்





Read more...

world time

Related Posts with Thumbnails