உங்களை எமது இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

பூமி எப்பொழுது தோன்றியது?

Monday 26 April 2010


தற்போது இந்த பூவுலகில் மனிதரகள் எண்ணற்ற அதிசயங்களயும், வெற்றிகளையும் கண்டு வருகின்றனர்.
முன்பிருந்த காலத்தோடு ஒப்பி டுகையில் தற்போது மனிதர்கள் பல்விதமான முன்னேற்றங்களைக்கண்டுவிட்டனர்,
கண்டும் கொண்டிருக்கின்றனர். இந்த மனிதன் எங்கிருந்து தோன்றினான்?
இந்த பூமி எப்போது தோன்றியது? எங்கிருந்து மனிதனுக்கு இவ்வளவு ஆற்றல் கிடைத்தது என்பது இன்றும்,
இவையெல்லாம் நம் சிந்தனைக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.
இதற்கான தேடல்களும், ஆராய்ச்சிக ளும் பல மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவை எப்போது தோன்றின என்பதற் கான விடைகள் இன்னும் சரியாக கணக் கிடப்படவில்லை. இருப்பினும் அறிவியல் ஆய்வாளர்கள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த பல ஆய்வுகளின் முடிவின்படி இந்தப் பூவுலகம் எப்போது தோன்றியது என்பது ஓரளவு கணிக்கப்பட்டிருக்கிறது. பூமியில் மனிதனின் தோற்றம், அவன் மொழியைக் கற்றுக்கொண்ட விதம் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.


வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி. அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலைத்தைப் பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத் திருக்கின்றனர்.

பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமையான பாறையைக் கொண்டு அறிவியலாளர்கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள்.
ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும் பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித்திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை.
பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது.
வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.
பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக்கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண்டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை. ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள்.
மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச்சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.

Read more...

நோயினால் பாதிக்கப்பட்ட மம்மி

Sunday 25 April 2010





Manama’ எனப்படும் பண்டய கால நகரம் ‘Bahrin’ நாட்டில் உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட 4000 வயதைக் கொண்ட மம்மிக்கு ஏய்ட்ஸ் அறிகுறிகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கொடூர நோய் பரவி வந்தற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இவர்களால் ஏய்ட்ஸ் நோய் பல இடங்களில் பரவி இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த மம்மி எச்.ஐ.வீ கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

பராமரிக்கபடாமல் புதைந்து போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் ஓரின உறவினை அமல் படுத்தியதால் கடவுளால் தண்டிக்க பட்டுவிட்டார்கள் என சரித்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு காரணம் கொடுர நோய் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான Prof.Claude Poncheral கூறுகயில் இது ஒரு ஆச்சர்ய பட வைக்கும் அதிசய கண்டுபிடிப்பு என்கிறார். இங்கு உள்ள மக்கள் போரினால் அழிந்து போகவில்லை, மாறாக இயற்கயிலேயே மறணமுற்று காலப் போக்கில் மக்கள் குடி போக பயந்து தானாகவே இந்நகரம் அழிந்துவிட்டது.

1996-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘மனமா’ நாகரம் இருந்த தளத்தின் சவக் குழிகளை தோண்டியிருக்கிறார்கள் ஆராய்ச்சிக் குழுவினர். அங்கு பழுதுபடாத ஒரு மண்டபம் இருப்பதை கண்டுபிடித்தார்கள். மண்டபத்தின் நடுவில் சுண்ணாம்பு கற்களால் செய்யப் பட்ட சில சவப் பெட்டிகளை இருந்தது. அதில் ஐந்து அடி உயரம் கொண்ட மூன்று ஆண் மம்மிக்களை கண்டெடுத்துள்ளார்கள். இந்த மம்மிக்கள் இறக்கும் சமயத்தில் இருபது வயதிற்குள் இருந்திருக்க வேண்டுமென ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்கள். தகவல்கள் அடிப்படையில் அந்த மூவரும் வினோத நோயினால் உடல் பாதிக்கப் பட்டுள்ளார்கள். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அது ஏய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மம்மிக்கள் என்பதை அறிந்தவர்கள் ஆதிர்ச்சிக்குள்ளாகினர்.

Bahrin-னில் இருக்கும் மற்ற பண்டய குடியிருப்பு பகுதிகளிழும் இந்த ஆராய்ச்சி தொடரப்பட்டிருக்கிறது. அங்கு உள்ள தகவல்களை திரட்டி அக்காலத்தில் இந்த நோய் எந்த அளவில் மனிதனை பாதித்துள்ளது எனும் ஆராய்ச்சி பணியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் Prof.Poncheral குழுவினர்.

நன்றி,

விக்னேஷ்


Read more...

சிகிரியாக் குன்று


சிகிரியாக் குன்று இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டம்அனுராதபுரம் மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (காஷ்யபன்) (கி.பி. 477-495) அமைத்தான். கோட்டையை சுற்றி அகழியும் கட்டப்பட்டுள்ளது. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்க படவேண்டிய கலாச்சார முக்கியதுவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவியங்களின் சிறப்பு இக் குகையினுள் ஃபிராஸ்கோ (FRASCO) முறையில் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஒவியங்களில் காணப்படும் பெண்கள் சிலரால் தேவதைகள் (அப்சரஸ்கள்) எனவும் சிலரால் காசியப்பனின் மனைவிகள் எனவும் கூறப்படுகின்றனர். இவர்களில் சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும் சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் வரையப்பட்டுள்ளனர்.


சிகிரியா ஒவியம்

குன்றின் தோற்றம்.
இரண்டு பெரும் பாறைகளுக்கூடு செல்லும் பாதை
உச்சிக்கு ஏறுவதற்காக அமைக்கப்பட்ட படிகள்
உச்சியில் அமைக்கப்பட்ட நீர்த்தடாகம்
மேலிருந்து பார்க்கும் போது குன்றின் முன் அமைக்கப்பட்ட மண்டபம், பாதைகளின் அழிந்த பகுதிகள்
உச்சியில் இருந்து குன்றின் இடைத்தளதின் பார்வை
மேலிருந்து ஒரு காட்சி

Read more...

விண்வெளியை சுத்தப்படுத்தும் செயற்கைகோள்.


அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆய்வுப்பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் இந்த செயற்கை கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன.
சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன.

கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் முலம் சுமார் 5 ஆயிரத்து 500 டன் எடையுள்ள குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன. இந்த குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைகோள்கள் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. டெலிவிஷன் ஒளிபரப்பு மற்றும் தகவல் தொடர்புகள் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது.

இந்த பிரச்சினையை தீர்க்க இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைகோள்களை தயாரித்து அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் முலம் விண்வெளி குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள்.

இந்த குப்பைகளை சேகரிக்கும் வகையில் இந்த நானோ செயற்கைகோளில் காந்த வலை ஒன்றும் இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். பின்னர் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும். அடுத்த ஆண்டு இதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்குகிறது.

Read more...

இன்டர்நெட்டில் பதற்றம் தரும் செய்திகள்........


இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் அடிக்கடி சில போலியான செய்திகள், தகவல்கள் நம்மை அச்சுறுத்தி உடனே செயல்பட வைக்கும் வகையில் வருவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த செய்திகள் பலவகைப்படும். சில எடுத்துக் காட்டுக்களைப் பார்க்கலாம். இவை எல்லாமே பாப் அப் விண்டோக்களில் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குவதை அறியவில்லையா? வைரஸ் பாதித்துள்ளது.

ஒரு அப்டேட் செய்திட வேண்டும். ட்ரோஜன் அல்லது மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும், வைரஸ் நீக்கப்படும்.

இவற்றைப் படித்த நாம் அனைவருமே சிறிது கலவரப்படுவோம். உடனே செயல்பட்டு லிங்க்கில் கிளிக் செய்து வைரஸை இலவசமாக நீக்க முயற்சிக்க ஆசைப்படுவோம்.

இன்னும் சில செய்திகள், பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வந்தது போல் காட்டப்படும். அந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி தரப்பட்டிருக்கும். நிறுவனத்தின் முகவரி தானே, சரியாகத்தானே இருக்கும் என்று எண்ணி கிளிக் செய்திடுவோம்.

ஆனால் ஒரு சிறு எழுத்தை மாற்றி வேறு ஒரு வெப்சைட் செல்வோம். அங்கும் நிறுவனத்தின் வெப்சைட் சாயலில் வெப்சைட் காட்டப்பட்டு நாம் மாட்டிக் கொள்வோம்.

இது போன்ற செய்திகளை நம்பி நாம் செயல்படுகையில் நம் கம்ப்யூட்டரைக் கையகப்படுத்தும் வகையில் புரோகிராம்கள் பதியப்படலாம். பின் நம் பெர்சனல் தகவல்கள் அனைத்தும், அந்த புரோகிராமினை அனுப்பியவர்கள் கைகளுக்குச் சென்றுவிடும்.

அல்லது கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் வைரஸ்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது?

முதலில் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், லிங்க் ஆகத் தரப்பட்டிருக்கும் இடம் அருகே கர்சரைக் கொண்டு செல்ல வேண்டாம். எங்கும் கிளிக் செய்திட வேண்டாம். உடனே மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்க ஆரம்பிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தும் வழி எதுவும் திரையில் கிடைக்காது.

1. ஆல்ட் + எப்4 (Alt+F4) கீகளை சேர்த்து அழுத்தினால், இந்த எச்சரிக்கை செய்தி தரும் கட்டம் மறைந்துவிடும். அல்லது பிரவுசரே மறைந்துவிடலாம். பின் மீண்டும் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கி விடலாம்.

2. மேலே சொன்ன வழியின் மூலம், அந்த விண்டோவினை மூட இயலவில்லை என்றால், கண்ட்ரோல்+ ஆல்ட்+டெல் (Ctrl+Alt+Del) கீகளை அழுத்தி டாஸ்க் மேனேஜரைப் (Task Manager) பெறவும். இதில் அப்ளிகேஷன்ஸ் (Applications) டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.

3. இங்கு உங்கள் பிரவுசர் பெயர் பட்டியலில் இருக்கும். உடன் ஏதாவது புதியதாக ஒரு புரோகிராம் தெரிகிறதா என்று பார்க்கவும். இருந்தால் அதுதான் உங்களை ஏமாற்றும் புரோகிராம். அதனைத் தேர்ந்தெடுத்து என்ட் டாஸ்க் (End Task) பட்டனை அழுத்தி, அந்த புரோகிராமினை மூடவும். அப்படி ஒன்றும் இல்லை என்றால், பிரவுசர் புரோகிராமினை மூடவும்.

சில நடவடிக்கைகளை நாம் மறக்காமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.

எப்போதும் உங்கள் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை டவுண்லோட் செய்து, அவ்வப்போது இயக்கிப் பார்ப்பதுவும் நல்லது.

இதற்கென புரோகிராம் ஒன்றினை இணையத்தில் அண்மையில் காண நேர்ந்தது. அதன் பெயர்Malwarebytes AntiMalware. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இயக்கலாம்.


Read more...

சுறாவைப்பற்றிய தகவல்கள்.

சுறாக்களில் பல வகை உண்டு. திமிங்கலச் சுறாதான் சுறாமீன் இனத்தில் பெரியது. அதிகபட்ச நீளம் 60 அடி.
சுறாமீன் மிகவும் வலிமை கூடியது விலங்குகளை மிகவும் சுலபமாக வேட்டையாடும்
சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன. ஓரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை உருவமைப்பிலுள்ள சுறா மீன்கள் உள்ளன. வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமானது. 40அடி நீளம் கொண்டது. ஒரு மனிதனை உணவாக உண்ணக் கூடியது. சுறாக்களிலேயே மிகவும் பெரியது திமிங்கலச் சுறா. 50 அடி நீளமும் 20 டன் எடையும் கொண்டது. தீங்கு செய்யாது. சுறா மீன்களுக்கு உடலில் எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சிதல்ப்பிடிப்பதில்லை.




Read more...

கிளி பற்றிய......

கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். அறுநூறுக்கும் மேற்பட்ட விதவிதமான கிளிகள் உள்ளன. கிளியால் தன் அலகுகளின் மேல் அலகுகளை மட்டுமே அசைக்க முடியும். கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.

பெரும்பாலான பறவைகளுக்கு அதன் கால் விரல்களில் மூன்று முன்னோக்கியும், ஒன்று பின்னோக்கியும் இருக்கும். ஆனால், கிளிகளுக்கு இரண்டு விரல்கள் முன்னோக்கியும், இரண்டு விரல் பின்னோக்கியும் இருக்கும். கியா என்று பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் தின்பவை.

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியில் வாழும் ஒரு வித மஞ்சள் நிற மீனைத் தின்னும். பச்சை நிற கிளிக் குஞ்சுகள் நாளடைவில் மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகிய நிறங்களுடன் பஞ்சவர்ணக்கிளிகளாக மாறிவிடுகின்றன.





Read more...

அறிவோம் சிலவற்றை .......


உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.

உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.

உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.

தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது-ஈஸ்ட்.

உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது-ஆக்சிஅசிட்டிலின்.

காய்களை பழங்களாக்க பயன்படுவது-எத்திலின்.

விண்வெளியில் உணவாகப் பயன்படுவது-குளோரெல்லா.

முடிச்சாயம் தயாரிக்கபயன்படுவது-வெள்ளிநைட்ரேட்.

வளையாமல் நேராகச் செல்லும் நீளமான் ரெயில் பாதை உள்ள நாடு-ஆஸ்திரேலியா-478 கி.மீ

குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது-குளோரின்.

விவாகரத்துக்கு அனுமதி இல்லத நாடு-அயர்லாந்து.

பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது-பொட்டாசியம் நைட்ரேட்.

துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு-ஸ்பெயின்.

தீப்பெட்டி தயரிப்பில் பயன்படுவது-பொட்டாசியம் குளோரைட்.

ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு-ரஷ்யா.


மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம்-லண்டன்.


வேறு எந்த மொழிகளிலும் இல்லாத சிற்ப்புக்குரிய இரு தமிழ் எழுத்துக்கள்--ற,ழ.

ஈர்ப்புவிசை மிகக்குறைவன கோள்-புதன்.

ஒளி புகக்கூடிய உலோகம்-மைக்கா.

இலைகலளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம்-செரி.

பச்சையம் இல்லாத தாவரம் -காளான்.

50 அடிக்கு மேல் வளரும் புல் இனத் தாவரம்-மூங்கில்.

Read more...

ஓணான் வகை விலங்குகளின் அதிசய வாழ்க்கை......

பச்சோந்தியின் வாழ்க்கை.



பச்சோந்திகளின் இனபெருக்கம்: தாய் பச்சோந்தி முட்டைகளை இடுவதற்கு ஏதுவான ஒரு இடத்தை தேர்வுசெய்து அதில் சிறய பள்ளம் ஒன்றை தோண்டி அதில் சுமார் முப்பது முட்டைகள் வரை இடும், பின் அதன் மேல் மண்ணை போட்டு மூடிவிட்டு சென்றுவிடும், மீண்டும் அந்த இடத்திற்கு தாய் பச்சோந்தி திரும்பிவருவதில்லை. தன் குழந்தைகளை திரும்பி கூட பார்க்காது. சில மாதங்கள் முதல் சில வருடங்கள் கூட ஆகலாம் பச்சோந்தி குஞ்சுகள் பொரித்து வெளிவர, வெளிவந்த குஞ்சுகள் மூடியிருக்கும் மண்ணை உடைத்துவிட்டு வெளியேறி புது வாழ்கையை துவக்கும்.





பச்சோந்தி எவ்விதம் என்பதைக்கான்போம் .


ஓணான், பல்லி, பாம்பு இனத்தைச் சேர்ந்த பச்சோந்தி ஒரு வினோதப் பிராணி. இதைப் பற்றிய சில தகவல்கள் இதோ. புத்தகத்தில் படித்தவை அல்ல. நேரில் கண்டறிந்தவை.

பச்சோந்தி நிறம் மாறும் என்பது உண்மை. ஆனால் நினைத்தபடி எல்லாம் அது இருக்கும் சுற்றுப் புறத்திற்கேற்ப நிறம் மாறும் என்பது தவறு. சாதாரணமாக பச்சை நிறத்திலே சில சிறு கருப்புக் கட்டங்களுடன் காணப்படும் இது கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை நல்ல பச்சை நிறத்திலிருந்து, கரும் பச்சையாகவொ அல்லது வெளிர் பச்சையாகவோ மாறுகிறது. அதன் மீதுள்ள கருப்பு புள்ளிகளோ கட்டங்களோ சற்றே மாறுகின்றன. நிற மாற்றம் அதன் மன நிலையையும் தன் சகாக்களுடன் எண்ணப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதற்குமே.



பச்சோந்திகளிடம் பல வியக்கத் தக்க விஷயங்கள் உள்ளன. அவை வருமாறு.

உருவத்தில் ஓணான் மாதிரித் தோன்றினாலும் இது ஓணான் போல வேகமாக ஓடக்கூடிய ஒன்றல்ல. முன்னும் பின்னுமாக ஆடி ஆடி நிதானமாக ஒரு ஒரு அடியாக காலை முன் வைத்து நகரும்.

பச்சோந்திக்கு முதல் எதிரி காகம். பச்சோந்தியைக் கண்டால் விடாது. கொன்று தின்றுவிடும். காகத்திடம் இருந்து தப்புவதற்குத் தான் இவை இருக்கும் தாவரங்களின் பச்சை நிறத்தையே இதற்கும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான்.

பச்சோந்தியின் கண்கள் இரெண்டும் தனித் தனியே இயங்கக் கூடியவை. ஒரு கண் முன்புறம் பார்க்கும் போது மற்றொன்றால் அது பின் புறம் பார்க்கும். அவ்வாறு பார்ப்பதை மாற்றிக் கொண்டே இருக்கும். கண்கள் ஒரு உருண்டையான தோல் பைக்குள் இருக்கும் ஒரு மில்லிமீடர் அளவிலான சிறு ஓட்டை கொண்டதாக. கண்களைத் தனித் தனியாக எல்லாப் பக்கமும் சுற்ற வல்லது பச்சோந்தி.

பச்சோந்தியின் வால் அதற்கு ஐந்தாவது கால். ஒரு குச்சியில் இருந்து மற்றொன்றுக்குத் தாவும் போது முதலில் உடலை கவிழ்த்து வைத்த ஆங்கில எழுத்து ‘யூ’ போன்று வளைத்துக் கொண்டு முன்னங் கால்களைக் கொண்டு புதிய குச்சியைப் பிடிக்கப் பார்க்கும். எட்டவில்லை என்றால் முதுகை நிமிர்த்தி உடலை நீட்டி முன்னே உள்ள குச்சியைப் பிடிக்கப் பார்க்கும். அப்போதும் எட்ட வில்லை என்றால் தனது வாலை இருக்கும் குச்சியில் விஷ்ணுச் சக்கரம் போன்று சுருட்டிக் கொண்டு நான்கு கால்களையும் விட்டுவிட்டு எட்டிப் பார்க்கும். மீண்டும் எட்ட முடிய வில்லையா? விஷ்ணுச் சக்கரத்தினை மெதுவாகப் பிரித்து குச்சியை எட்டிப் பிடிக்கப் பார்க்கும். அப்பொதுகூட எட்ட வில்லையா? பேசாமல் வாலை மீண்டும் விஷ்ணுச் சக்கரமாக சுருட்டி உடலை பின்னே இழுத்து வந்த வழியெ திரும்பி விடும்.



பச்சோந்தியின் நாக்கு கிட்டத் தட்ட அதன் உடல் நீளத்திற்கே ஆனது. வேண்டும்போது நீட்டி முன்பக்கமாக சாட்டை போல வேளியே மின்னல் வேகத்தில் தள்ளி பசை கொண்ட நுனி நாக்கால் அதற்கு மிகவும் பிடித்த உணவான ஈ மற்றும் சிறு புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். நாக்கு ஒட்டிக் கொண்டிருப்பதும் அடி வாயில் அல்ல. நுனி வாயில்.

பச்சோந்தியின் முன்னங் கால்களில் வெளிப்புறம் இரெண்டும் உட்புறம் மூன்றுமாக ஊள்ள நகங்கள் பின்னங் கால்களில் வெளிப் புறம் மூன்றும் உட்புறம் இரெண்டுமாக இருக்கும்.

இப்படிப் பல வியக்கத் தக்க விநோதங்களை பச்சோந்திக்கு அதன் வாழ்க்கைக்கேற்ப அளித்திருக்கிறான் ஆண்டவன்.

பச்சோந்தி நல்ல பாம்பு போன்று விஷம்கொண்டது என்பர் சிலர். இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. கொல்லப்படவிருந்த ஒரு பச்சோந்தியை காப்பாற்றும் பொருட்டு அதன் வாய்க்குள் என் விரலை விட்டிருக்கிறேன். அதுவும் நன்றாகக் கடித்தது. ஆனால் இன்றும் நான் உயிருடன் தான் இருக்கிறேன். அந்தப் பச்சோந்தியும் அன்று பிழைத்தது.




பச்சோந்தி என்றால் பச்சை நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும்
என்பதில்லை. வேறு நிறங்களிலும் இருக்கலாம். அடுத்து வரும் படத்தைப் பாருங்கள்.

Read more...

மனிதரை உண்ணும் ராட்சதர்கள்....

Saturday 24 April 2010

குறிப்பு -இளகிய மனம் படைத்தவர்கள் மற்றும் குழந்தைகள் இதைப்பார்காதீர்கள்.

Read more...

சிங்கத்திடமிருந்து தன்னைக்காப்பாற்றும்................

Read more...

உலகில் உள்ள மிகவும் அழகான பறவைகள்.


















Read more...

அழகான கண்ணைக்கவரும் பறவைகளுடைய ஓவியங்கள்.








Read more...

world time

Related Posts with Thumbnails